tamilnadu

img

பிரணாப் முகர்ஜிக்கு ‘பாரத ரத்னா’

புதுதில்லி,ஆக.8- நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 26 ஆம் தேதி அறிவித்தார். இதேபோன்று இசை மேதை பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகிய இருவருக்கும் மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து வியாழ னன்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி  கவு ரவித்தார். இதே போல், பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகிய இருவரின் உறவினர்களிட மும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

;