tamilnadu

img

பெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள் : டைம்ஸ் பேக்ட் ஆய்வு

பெங்களூர்: இந்தியாவின் புதிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக பெங்களூர் மற்றும் புனே மாறுவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்பு, மும்பை, சென்னை நகரங்கள் இப்படி ஹாட்ஸ்பாட்டாக இருந்தன. ஹாட்ஸ்பாட்டாக இருந்த மற்றொரு நகரம் டெல்லி. இங்கெல்லாம் இப்போது ஓரளவுக்கு பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பெங்களூர் மற்றும் புனே நகரங்களில் கொரோனா வேகமாக பரவுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க, லாக்டவுனில் பல தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதன்பிறகு, பல மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்துள்ளன. செப்டம்பர் 3ம் தேதி இந்தியா 9.86 லட்சம் கொரோனா கேஸ்களை பதிவு செய்யக்கூடும் என்று சில டிரெண்ட் கணிப்புகள் எச்சரிக்கின்றன. 'டைம்ஸ் பேக்ட்-இந்தியா தொற்றுநோய் அறிக்கை' இந்த தகவலை வெளியிட்டுள்ளது.