tamilnadu

img

மருத்துவமனையை தாக்கி டாக்டருக்கு மிரட்டல்.... குஜராத் பாஜக  எம்எல்ஏவுக்கு 6 மாதம் சிறை!

அகமதாபாத்:
குஜராத்தின் ஜாம்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ராகவ்ஜி படேல். இவரும், இவரதுகூட்டாளிகளும் சேர்ந்து கடந்த 2007-ஆம் ஆண்டு ஜாம்நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த டாக்டருக்கும் மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக ராகவ்ஜி படேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜாம்நகரில் உள்ள ஜூடிசியல்மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பாஜக எம்எல்ஏ ராகவ்ஜி உட்பட 5 பேருக்கு 6 மாத சிறைத்தண்டனையும், தலா ரூ. 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, ராகவ்ஜி படேல் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக குஜராத் பாஜகஅரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால்,அதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார் என்பதுடன், தற்போது தண்டனையும் வழங்கியுள்ளார்.