அரியலூர்:
ஆண்டிமடம் அருகே தலித் பெண் ஊராட்சித் தலைவரை தாக்கிய முன்னாள்ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் திருக்களப்பூர் ஊராட்சிமன்றத் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த புஷ்பம் பதவி வகித்து வருகிறார். அதேஊராட்சியில் அவரது கணவர், ஊராட்சிமன்ற செயலாளராக பணி செய்து வருகிறார். இந்த ஊராட்சியில் விளையாட்டு திடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திடல் உரிய முறையில் அமைக்கப்படவில்லை என்று கூறி, ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும், வேறு சமூகச் சேர்ந்தவருமான சபாநாயகம் என்பவர், புகார் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நேரடி விசாரணைக்கு வந்துள்ளார். அச்சமயத்தில் தலித் ஊராட்சிமன்ற பெண் தலைவரை, முன்னாள் ஊராட்சிதலைவர் தரக்குறைவாகவும், இழிவுபடுத்தி
யும் பேசியுள்ளார். இதை எதிர்த்து கேட்டஊராட்சிமன்ற பெண் தலைவரையும், அவரது கணவரையும் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்குள் வைத்தே தாக்கியுள்ளனர். இவைஅனைத்தும் ஒன்றிய ஆணையாளர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. ஆனால் அவர்தடுப்பதற்கான எந்த முயற்சியும் மேற் கொள்ளவில்லை.
இதுதொடர்பாக தகவல் அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் சின்னை,பாண்டியன், கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் கே.மகாராஜன், இளங்கோவன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் வி.பரமசிவம் உள்ளிட்டோர் நேரடியாக சென்று விசாரித்தறிந்தனர். ஊராட்சிமன்ற தலித் பெண் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது சாதிய வன்மத்
துடன் தாக்குதல் நடத்திய முன்னாள் ஊராட்சிதலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.