tamilnadu

img

இந்திய அரசியல் அமைப்பிற்கு ராணுவம் விசுவாசமாக இருக்கும்

ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

புதுதில்லி,ஜன.11-  இந்திய அரசிய லமைப்பிற்கு ராணுவம் எப்போதும் விசுவாசமாக இருக்கும் என்றும் எந்த விதமான போருக்கும் ராணு வம் தயாரான நிலையில் உள்ளதாகவும் ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரி வித்துள்ளார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே தில்லியில் சனிக்கிழமை யன்று  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நாட்டின் ஒட்டுமொத்த பாது காப்புத்துறையும் இதற்கு முன்பு இருந்ததை விட பலமாக உள்ளது. ராணு வத்தை பொறுத்தவரை, அது இந்திய அரசிய லமைப்பிற்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும்.  அரசியலமைப்பில் கூறப் பட்டுள்ள நீதி, சுதந்தி ரம், சமத்துவம் மற்றும் சகோ தரத்துவம் ராணுவத்திற்கு வழிகாட்டலாக இருக்கும். எந்த நேரத்தில், எந்த வடி வத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.  எண்ணிக்கை முக்கிய மல்ல தரமே இந்திய ராணு வத்தின் தாரக மந்திரம்.  பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டது போன்ற காட்டுமிராண்டித் தனமான செயல்களை ராணு வம் பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவித்தார்.
 

;