tamilnadu

img

ஆய்வாளர்,காவலர் தேர்விலும் முறைகேடு?

சென்னை:
சார்பு ஆய்வாளர், 2 ஆம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்வில் வேலூர் மாவட்டம் முஞ்சூர்பட்டில் உள்ள சிகரம் தொடு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 2 ஆம் நிலை காவலருக்கான தேர்வில், அந்த மையத்தில் பயின்ற 130க்கும் மேற்பட்டோர் ஒரே மையத்தை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து தேர்வு எழுதி  வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுடைய வரிசை எண்ணை பரிசோதித்து பார்த்தபோது, இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்விலும் இதே பயிற்சிமையத்தில் பயின்றவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;