tamilnadu

img

அமித் ஷா வெளியேறு!

நாடாளுமன்றத்தை அதிரச் செய்த எதிர்க்கட்சிகளின் முழக்கம்

புதுதில்லி, மார்ச் 2- 47 பேரின் உயிரை பறித்துள்ள ஆர்எஸ்எஸ் -பாஜக கும்பல்களின் தில்லி வன்முறை வெறியாட்டத் திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும் என்ற  முழக்கம், இந்திய நாடாளு மன்றத்தை அதிரச் செய்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2 திங்களன்று துவங்கியது. அவை கூடுவதற்கு முன்பே, அவையில் தில்லி வன் முறை வெறியாட்டம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சார்பில் பல உறுப்பினர்கள் ஒத்தி  வைப்பு நோட்டீஸ்களை அளித்திருந் தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன், மக்களவையில் சு.வெங்கடேசன் ஆகியோர் ஒத்தி வைப்பு நோட்டீஸ் அளித்திருந்த னர். தில்லி வன்முறை வெறி யாட்டம் மிக பயங்கரமான, அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்பதால் அதை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதேபோன்று காங்கிரஸ், திமுக, சிபிஐ, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் ஒத்திவைப்பு நோட்டீஸ்களை அளித்திருந்தனர்.

இந்நிலையில் மக்களவை கூடியதும், கடந்த பிப்ரவரி 28 அன்று  காலமான பீகாரின் வால்மீகி நகர் தொகுதி ஐக்கிய ஜனதா தள எம்.பி., வைத்தியநாத் பிரசாத் மகதோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒத்தி வைப்பு தீர்மானங்களை சபா நாயகர் ஓம்பிர்லா ஏற்றுக் கொள்ளாத நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசத்துடன் முழக்கங்களை எழுப்பத் துவங்கி னர். தில்லி வன்முறை வெறி யாட்டங்களுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் விடாமல் முழக்க மிட்டனர். அவர்களுக்கு எதி ராக பாஜக உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். தொடர்ந்து அமளி நில வியது. சபாநாயகர் ஓம்பிர்லா அவை யை 2 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் அவை கூடிய போது, அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டுமென்று எழுதப்பட்ட கருப்பு பேனர் ஒன்றை எதிர்க்கட்சி உறுப் பினர்கள் உயர்த்திப் பிடித்தனர். தில்லி மக்களுக்கு நீதி வேண்டும்; அமித்ஷா வெளியேற வேண்டும் என்றும், வெறுப்புப் பேச்சை நிறுத் துங்கள், இந்தியாவை காப்பாற்றுங் கள் என்றும் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் முழக்கம் எழுப்பியவாறு இருந்தனர். அவர்களுக்கு எதி ராக மீண்டும் மீண்டும் பாஜக உறுப் பினர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் 3 மணி வரையிலும், பின்னர் 4 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்ட அவை, தொடர் அமளி காரண மாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது.

இதனிடையே, பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடிய போது, எதிர்க்கட்சியினரின் ஆவேசமிக்க போராட்டத்திற்கிடையே கனிம சட்ட திருத்த மசோதா 2020 அறிமுகப் படுத்தப்பட்டது. பின்னர் நேரடி வரிவிதிப்பு மசோதா 2020 பற்றி பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அவை பரி சீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். முன்னதாக அவர் கடந்த  பிப்ரவரி 5 அன்று இம்மசோதா வை மக்களவையில் அறிமுகப்படுத்தி யிருந்தார். மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்பு நிலவியது. தில்லி வன்முறை கள் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஆவேச முழக்கம் எழுப்பியதைத் தொடர்ந்து அவை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

முன்னதாக திங்களன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, தில்லி வன் முறை வெறியாட்டத்திற்கு பொறுப் பேற்று அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ், ஆம்  ஆத்மி, திரிணாமுல் எம்.பி.க்கள் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.