திருவனந்தபுரம்:
கேரளத்தில் கே போன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ‘ஐடியா’, ஜியோ உள் ளிட்ட ஏகபோகங்களின் வருவாய் ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு மேல்குறையும் என ஒரு ஆய்வின்படி தெரியவந்துள்ளது. லாபத்தை அதகரிப்பதற் காக பாஜகவின் மத்திய அரசைப் பயன் படுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தை தகர்த்த ஏகபோகங்கள் பிறக்கப்போகும் கே போனை கொல்ல தயங்காது. தொடக்கத்தில் இருந்தே, தங்கக் கடத்தல் என்றபோர்வையில் அமலாக்கத்துறை கேபோனை குறிவைப்பதாக சந்தேகிக்கப்பட் டது. அது இப்போது தெளிவாகி விட்டது.
கேரளத்தின் கே போன் மாதிரியைப்பின்பற்றி இதே போன்ற திட்டங்களில்பிற மாநிலங்களும் நுழைய வாய்ப்புள்ளதால் தங்கள் எதிர்காலம் குறித்து கார்ப்பரேட்டுகள் கவலைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவும் சட்டமன்றத்தில் ஏகபோகங்கள் சார் பாக பேசினார். இணையச் சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்கும்போது எதற்காக கே-போன் என்று அவர் கேள்விஎழுப்பினார்.
20 லட்சம் ஏழைகளுக்கு இலவசம்
இணைய வசதியை குடியுரிமையாக அறிவித்து வரலாறு படைத்த ஒரு நாட் டில் விரிவான, முழுமையான இணைய இணைப்பை உறுதி செய்வதற்கான ஒரு அரசாங்க முயற்சியே கே போன்.இதற்காக கேரளம் முழுவதும் 52,000கி.மீ நீளமுள்ள ஆப்டிகல் பைபர் கேபிள் நெட்வொர்க் அமைக்கப்பட்டுள்ளது. 30,000க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளையும், வீடுகளையும் கே போன் வழியாக இணையவசதி சென்றடையும். இது தற்போதுஇயங்கும் எந்த தனியார் நிறுவனத்தையும் விட மிகப்பெரிய வலையமைப்பாகும்.வினாடிக்கு 10 எம்பி முதல் 1 ஜிபி வரைவேகத்தில் இணையத் தொடர்பு கிடைக் கும். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு கட்டணமின்றி இணையவசதி கிடைக்கும். மீதமுள்ள 90 லட் சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குறைந்த கட்டணத்தில் இந்த வசதி கிடைக்கும். அரசு சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கும். வீட்டில் இருந்தபடி விண்ணப்பிக்கவும் சான்றிதழ்களைப் பெறவும் முடியும். கிராமப் புறங்களில் ஆன்லைன் கல்விக்கான வசதிகள் வழங்கப்படும். சுகாதாரத் துறையில் மின் ஆலோசனை (இ-கன்சல்டிங்) கிடைக்கும். சிறு வணிகங்களுக்கு இ-காமர்ஸ் மூலம் விற்க வாய்ப்பு கிடைக்கும்.தற்போது மாநிலத்தில் உள்ள அரசுநிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு ஏகபோகங்களும் பிஎஸ்எல்எல் நிறுவனமும் இணையத் தொடர்பை வழங்கி வருகின்றன. கேஎஸ்இபி. ஆண்டுக்கு ரூ.15 கோடி, பஞ்சாயத்து மற்றும்கிராம அலுவலகங்கள் ரூ.40 கோடி, காவல் நிலையங்கள் ரூ.20 கோடி, பிறஅலுவலகங்கள் ரூ.75 கோடி செலவிடுகின்றன. கேரளாவில் வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.1600 கோடி செலவிடப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கு மேல் ரிலையன்ஸ் உள்ளிட்ட ஏகபோகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
தொடர்பு எல்லைக்கு வெளியே
மாநிலத்தில் இணையத்திற்கான மொபைல் போன்களின் நம்பகத்தன் மையும் கே போன் சாத்தியமாகி வருவதால் குறையும். வோடபோன் ஐடியா மாநிலத்தில் 1.8 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஒரு கோடிக்கு அருகில் உள்ளது. ஏர்டெலுக்கு 60 லட்சம். கே போன் வரும்போது, இந்த ஏகபோக நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து தங்களது சந்தாதாரர் களை இழப்பார்கள். டிராய் கருத்துப்படி, நாட்டின் பிராட்பேண்ட் சந்தையில் பாதிக்கும் மேற்பட்டவற்றை (57.68 சதவிகிதம்) ரிலையன்ஸ் ஜியோ கொண்டுள்ளது. ஏர்டெல் (21.41 சதவிகிதம்) இரண்டாவது இடத்திலும், வோடபோன் ஐடியா (16.47 சதவிகிதம்) மூன்றாவது இடத்திலும், பிஎஸ்என்எல் வெறும் 3.19 சதவிகிதத்துடன் மிகவும் பின்தங்கியிலும் உள்ளது. கேரளத்தின் டேட்டா சந்தையில் ரிலையன்ஸ், வோடபோன், ஏர்டெல் ஆகியவை 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. ஏசியாநெட் டும், ரயில் வயரும் இந்த துறையில் உள் ளன. கே போன் வருகையுடன், இவை அனைத்தும் ‘ தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடும்’.