புதுதில்லி:
தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனை மூத்த துப்புரவு மேற்பார்வையாளர், ஹீரா லால் கொரோனாவால் பாதி க்கப்பட்டு உயிரிழந்தார்.ஹீராலால் கடமை தவறாதவர். கொரோனா காலத்தில் கடுமையாக உழைத்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது, மருத்துவமனையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்றுவந்தார். அவரை பரிசோதித்த போது கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.