tamilnadu

img

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சோம் தத் திகார் சிறையில் அடைப்பு

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம் தத் 2015 தாக்குதல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சோம் தத் தனது கூட்டாளிகளுடன் சஞ்சீவ் ராணாவை தாக்கியுள்ளார்.இந்த தாக்குதலினால் பலத்த காயமுற்ற சஞ்சீவ் ராணா எம்.எல்.ஏ சோம் தத் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் எந்த ஆத்திரமூட்டலும் இல்லாமல் ஒருவரை காயப்படுத்தியதால் சோம் தத்திற்கு 6 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது.மேலும் நீதிமன்றம் ரூ .2 லட்சம் அபராதம் விதித்ததுள்ளது.

;