புதுதில்லி:
நான்கு கிராமப்புற இந்தியர் களில் மூன்று பேர் சத்தான உணவைவாங்குவதற்கு வசதியில்லாமல் உள்ளதாக ‘உணவுக் கொள்கை’(Food Policy) இதழ் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், தங்களின் முழு வருமானத்தையும் கூட உணவுக்காக செலவிட்டாலும், அந்த மூவரில் இருவரால், அரசு நிர்ணயித்துள்ள ஊட்டச்சத்து அளவிற்கான உணவை இந்தியாவில் பெற முடிவதில்லை என்றும்அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.‘கிராமப்புற இந்தியாவில் சத் தான உணவுகளின் மலிவு’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, தேசியமாதிரி கணக்கெடுப்பு- 2011-இன்தரவுத்தொகுப்பிலிருந்து கிடைக்கக் கூடிய சமீபத்திய உணவு விலை மற்றும் ஊதிய தகவல்களைப் பயன் படுத்தி மேற்கொள்ளப்பட்டு உள் ளது.சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கல்யாணி ரகுநாதன் உள்ளிட்டோர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது:‘உணவில் தன்னிறைவு பெற்ற பாதுகாப்பான நாடு இந்தியா’ என மத்திய அரசு கூறிக்கொண்டாலும் பல ஊட்டச்சத்து குறியீடுகளில் இந்தியா மோசமான நிலையில் இருக்கிறது.
கடந்த 16-ஆம் தேதி வெளியான உலக பட்டினி குறியீடு (Global Hunger Index), கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருப்பதைக் காட்டுகிறது. இது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டையே பிரதிபலிக்கிறது. கலோரி அளவை வெறுமனே அளவிடும் குறிகாட்டிகளில், இந்தியா ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் அந்த கலோரிகளின் ஊட்டச்சத்து மதிப்பை அது கணக்கிடவில்லை.தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படிவளரிளம் பெண்களுக்கு ஒருநாளைக்கு போதுமான ஊட்டச்சத்துகிடைக்க 330 கிராம் தானியங்கள் மற்றும் 75 கிராம் பருப்பு வகைகள்,300 கிராம் பால், 100 கிராம் பழம், மற்றும் 300 கிராம் காய்கறிகளுடன், குறைந்தது 100 கிராம் அடர் பச்சைஇலைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.இதன்படி, இந்திய உணவுகளானஅரிசி, கோதுமை, கம்பு, பால், தயிர்,வெங்காயம், முள்ளங்கி, கீரை, வாழைப்பழங்கள் போன்ற மலிவான விலையுள்ள உணவுப் பொருட்
களை தேர்ந்தெடுக்க ஒருவருக்கு ஒரு நாளின் உணவுக்கு 45 ரூபாயும்- வயது வந்தவருக்கு 51 ரூபாயும் செலவாகும்.ஆனால், கிராமப்புற இந்தியர் கள் தங்கள் முழு வருமானத்தை உணவுக்காக செலவிட்டாலும், 63.3 சதவிகிதம் அல்லது 52 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் சத் தான உணவை வாங்குவதற்கு முடிவதில்லை.அவர்கள் தங்கள் வருமானத்தில்மூன்றில் ஒரு பகுதியை உணவு அல்லாத செலவுகளுக்காக ஒதுக்கினால், 76 சதவிகித கிராமப்புற இந் தியர்கள், அரசு பரிந்துரைக்கப்பட்ட உணவை வாங்க முடியாது. இந்த எண்கள் ஓரளவு ஊகமானதுதான் என்றாலும், நிச்சயமாக கிராமப்புற இந்தியாவில் உணவுமலிவு பிரச்சனையின் அளவை வெளிப்படுத்துகின்றன: இந்தியாவில் சத்தான உணவுகள் விலை மிகவும் உயர்வாக உள்ளது. வருமானமோ மிகக் குறைவாக உள்ளது.இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.