புதுதில்லி,நவ.16- இந்தியாவின் அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டாகிறது. இதனைக் கொண்டாடுவதற்கு நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் கூடும் கூட்டம் நவம்பர் 26 அன்று நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர் கள், இரு அவைகளின் எம்.பி.க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் காலை 11 மணி தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.