புதுதில்லி,பிப்.6- மத்திய அரசு துறைகளில் 6.83 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளு மன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அதில் அவர், மத்திய அரசு துறைகளில் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 பணியிடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று நிலவரப்படி, அவற்றில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 பணி யிடங்கள் காலியாக இருந்தன. ராஜினாமா, மரணம், பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங் களால் காலி இடங்கள் உருவாகின்றன. இந்த காலியிடங்களை சம்பந்தப்பட்ட துறைகள் நிரப்பும் என்று அமைச்சர் தெரி வித்துள்ளார்.