தில்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 6 பேர் கொரோனா தொற்றால் தெலுங்கானாவில் உயிரிழந்துள்ளனனர்.
தில்லி மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் கொரேனோ பாதிப்பால் இரண்டு பேர் காந்தி மருத்துவமனையிலும், அப்பல்லோ மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, நிஜாமாபாத் மற்றும் கட்வாலிலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 6 பேரும் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது.