tamilnadu

img

மியான்மர் : 2 ராய்ட்டர்ஸ் நிருபர்கள் விடுதலை

மியான்மர் சிறையில் கைது செய்யப்பட்ட 2 ராய்ட்டர்ஸ் நிருபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மியான்மரில் கடந்த ஆண்டு 10 ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வா லோன், கியாவ் ஓ என்ற 2 ராய்ட்டர்ஸ் நிருபர்கள் செய்தி வெளியிட்டனர். இதையடுத்து அரசின் ரகசிய ஆவணங்களை திருடியதாக கூறி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கடந்தாண்டு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராய்ட்டர்ஸ் நிருபர்கள் இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் இருவரையும் மியான்மர் அரசு விடுவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைதுக்கு ஐநா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


;