வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுதல் குறித்த வழிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெற்று வருகிறது. வாங்கப்படும் நிதியை அமைப்புகள் கல்வி, ஆன்மீகம், சமூக சேவை என பல்வேறு பயன்பாடுகளுக்கான பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெறுவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் நிதி உதவியை பெற முடியாது என தெரிவித்துள்ளது.
அதேபோல, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், அந்த மூன்று ஆண்டுகளில் ரூ.15 லட்சத்திற்கும் குறையாமல் நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.