tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் ஊதியம் வழங்காததை கண்டித்து செப்டம்பர் 26 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தையொட்டி பிஎஸ்என்எல் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் குமார்,பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சங்க நிர்வாகிகள் சுப்புரமணியன், செல்வம்,ரவிச்சந்திரன் உட்பட திரளான ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிஎஸ்என்எல்யூ மாவட்டத் தலைவர் பி.ரத்தினம், தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி.பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி.வினோத்குமார் உரையாற்றினர். பிஎஸ்என்எல்யூ மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.விஜய்ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.