புதுச்சேரி, ஜூன் 12- அரசு பள்ளிகளை பாது காக்கக் கோரி மாணவர் - வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் சைக்கிள் பிரச்சாரம் துவங்கியது. மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும், நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்க ளின் கட்டணக் கொள்ளையை தடுத்திட வேண்டும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பபெற வேண்டும், 25 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் - வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி முழுவதும் இரண்டு நாள் சைக்கிள் பிரச்சாரம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் உள்ள கலவை செட்டியார் அரசு மேல் நிலைப் பள்ளி எதிரில் சைக்கிள் பிரச்சாரத்தை மாணவர் சங்க மாநிலத் தலைவர் கண்ணன் துவக்கி வைத்தார். மாணவர் சங்கத்தின் பிர தேசத் தலைவர் ஜெய பிரகாஷ், வாலிபர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஆனந்து ஆகியோர் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முன்னால் பிரதேச தலைவர்கள் வெ.பெருமாள், ஆர்.சரவணன் ஆகியோர் பிரச்சாரத்தை வாழ்த்தி பேசினர். வாலிபர் மாணவர் சங்க நிர்வாகிகள் ப.சரவணன், லீலாவதி, சத்தியராஜ், வினோத், வின்னரசு, செம்மலர்,வந்தனா,பிரவீன் உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். இந்த சைக்கிள் பிரச்சாரம் வியாழனன்று பாகூரில் நிறைவடைகிறது.