புதுச்சேரி, மார்ச் 31- முத்தியால்பேட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக சிஐடியு சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சார ஊர்வ லம் நடைபெற்றது. புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சரவணனுக்கு, சுத்தியல் அரிவாள் நட்சத்தி ரம் சின்னத்தில் வாக்குகள் கோரி சிஐடியு சார்பில் இரு சக்கர வாகன ஊர்வலம் நடை பெற்றது. சிஐடியு பிரதேச குழு சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்திற்கு பிரதேச தலைவர் முருகன் தலைமை தாங்கினார். முறை சாரா தொழிலாளர்களுக்கு போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சரவணனுக்கு தொகுதி மக்கள் ஆதரவு கோரினர்.
சிஐடியு முன்னாள் தலை வர் ராமசாமி, முன்னாள் செய லாளர் பெருமாள், அரசு ஊழி யர் சங்கங்களின் சம்மேளன கௌரவதலைவர் பால மோகனன் ஆகியோர் பேசினர். சிஐடியு பிரதேச செயலா ளர் சீனிவாசன், பொருளா ளர் பிரபுராஜ் நிர்வாகிகள் மதிவாணன், மது, குணசேக ரன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக திருவள்ளுவர் நகரில் துவங்கிய மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் சோலை நகர், அங்காளம்மன்நகர் ஆகிய பகுதிகளைக் கடந்து இறுதியாக முத்தியால் பேட்டை மணிகூண்டு எதிரில் நிறைவடைந்தது.