பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமுஎக தமிழ் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகிகள் உமா, கலியமூர்த்தி, ராம்ஜி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.