புதுச்சேரி, ஜூன் 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச பாகூர் கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட பாகூர் நகரக் கிளையின் உறுப்பினர் கோ.சேகர் (எ) பரமானந்தன் உடல்நலக்குறைவால் திங்களன்று காலமானார். அவருக்கு வயது 52. அவரது உடலுக்கு கட்சியின் கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன், பிரதேச குழு உறுப்பினர்கள் கலியன், சரவணன், ராமமூர்த்தி, மற்றும் கொம்யூன்குழு உறுப்பினர்கள் செல்வராசு முத்துலிங்கம், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.