புதுச்சேரி, ஏப். 29- மக்கள் நலத்திட்டங்களை செயல்ப டுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாகக் கூறி கருப்பு உடை அணிந்து சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
இந்நிலையில் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 14 தொழிலா ளர்கள் ஆந்திர மாநிலத்திற்கு பணிக்கு சென்ற நிலையில், அவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் இருந்து சொந்த ஊரான ஏனாம் பகுதிக்கு திரும்பும்போது அவர்கள் எல்லையில் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கிரண்பேடி மீது புகார் மனு அளித்து, கருப்பு சட்டை அணிந்து சட்டமன்ற வளா கத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.