புதுச்சேரி,ஆக.22- புதுச்சேரியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிக ரித்து வருகிறது. புதுச்சேரியில் 1,318 பேருக்கு உமிழ்நீர் பரி சோதனை செய்ததில் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,112ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது.