புதுச்சேரி, ஜூலை 18- புதுச்சேரியில் சனிக்கிழமை புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,898 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 804 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 2 பேர், அரசு மருத்துவமனையில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்தார்.