நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு டெல்லி நுழைவாயில் பழைய டிராக்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை 7 மணி முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீ வைக்கப்பட்ட டிராக்டரை தீயணைப்புத்துறையினர் அகற்றியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருந்தார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், இன்று காலை டெல்லி நுழைவாயில் டிராக்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இளைஞர் காங்கிரசின் உறுப்பினர்கள் விவசாயிகளுடன் உடனிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களது முகநூல் பக்கத்தில் நேரலையில் பதிவிட்டுள்ளார். இந்த போராட்டம் குறித்து பஞ்சாப் காவலர்களை 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பயணித்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தானிய கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், பெரும் விவசாயிகளின் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மேலும், சுதந்திர போராட்ட வீரர் சாஹீது பகத் சிங்கின் மூதாதையர் கிராமமான கட்கர் கலனில் பஞ்சாப் முதல்வர் அமருந்தனர் சிங் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார். பஞ்சாப்பில் விவசாயிகள் அமிர்தசரஸ்-டெல்லி ரயில் பாதையில் அமர்ந்தனர். கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பதாகையின் கீழ் விவசாயிகள், கடந்த புதன்கிழமை முதல் பஞ்சாப்பில் ரயில் பாதையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில், பாராளுமன்றத்தில் மசோதா தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு எதிராக இன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸால் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
மூன்று மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதத்தை எதிர்க்கட்சி விமர்சித்து, மசோதாக்களில் கையெழுத்திட வேண்டாம் என்று குடியரசு தலைவரிடம் கூறியது. விதிகளை மீறி குரல் வாக்கு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மசோதாக்கள் முழுவதும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவே உள்ளதாக கூறி விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.