பாதுகாப்பு துறையை, பொதுத்துறையாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஆக. 20) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஆவடி கனரக வாகன தொழிற்சாலை முன்பு பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.