புதுச்சேரி அடுத்து பாகூர் கொம்யூனுக்குட்பட்ட கரையாம்பத்தூரில் உள்ள கிராமச் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தினந்தோறும் விபத்துக்குள்ளாவதை தடுக்க கொம்யூன் நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் சாலைகளை செப்பனிடக் கோரியும் மந்தவெளி மருத்துவமனை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கிரி தலைமை தாங்கினார். பாகூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் கண்டன உரையாற்றினார். பிரதேசக்குழு உறுப்பினர்கள் இளவரசி, சரவணன், ராமமூர்த்தி, கொம்யூன்குழு உறுப்பினர்கள் முத்துலிங்கம், சண்முகம், செல்வராசு, அரிதாஸ், உட்பட தேவதாசு, அன்பழகன், சதாசிவம், மாயவன் உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக நேருநகரில் இருந்து தாரை தப்பட்டையுடன் நடந்து வந்து மரணச்சாலைகளுக்கு மலர்வளையம் வைத்தனர்.