புதுச்சேரி, ஜூலை 11- பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேல் தகுதி நீக்கம் குறித்து புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர் சிவக்கொழுந்து அளித்த விளக்கம் வருமாறு: 2016ஆம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில் பாகூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனவேல், பாப்ஸ்கோ நிறுவனத்தின் வாரியத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய தோடு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புகார் மனு ஒன்றையும் அளித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற அரசு கொறடா அனந்தராமன் சட்டப்பேர வைத் தலைவருக்கு மனு ஒன்றை அளித்தார். அதில் அரசுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளு டன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்கி றார். எனவே தனவேல் எம்எல்ஏவை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று 10.1. 2020 அன்று மனு அளித்திருந்தார்.
பாகூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
இந்த மனு மீது சட்டபேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, விசாரணை நடத்தினார். பாகூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தனவேலிடம் உரிய விளக்கம் கேட்டிருந்தார். ஆனால் இன்று வரை தனவேல் உரிய ஆதாரத்துடன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரது மறுப்பு அறிக்கையும் எந்த பத்திரிகைகளிலும் வெளி யாகவில்லை. எனவே போதிய வாய்ப்பு அளித்தும் அவர் விளக்கமளிக்க தவறிவிட்டார். எனவே கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் பாகூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.