புதுச்சேரி,பிப்.15- முதல்வரின் உறுதிமொழியை ஏற்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்க ளின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கிருஸ்டோ பர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: அரசுஉதவிபெறும் தனியார் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 10ஆம் தேதி முதல் தொடர் தர்ணா வும், 13ஆம் தேதிவரை எதுவும் நடக்காத தால் 14ஆம் தேதி சட்டசபை அருகில் மறியல் செய்ய 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஊழியர்களும் அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகளுடன் சென்றோம். இந்நிலையில் காவல்துறையினர் வழி மறித்து கைது செய்தனர். பின்னர் வட்டாட்சி யர் ராஜேஷ்கண்ணா முன்பு ஆஜர்படுத்தி னர். அவர் எங்களை கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்.
முதல்வர் உறுதி
எங்களது போராட்டத்தை கேள்விபட்ட முதல்வர் நாராயணசாமி தில்லியிலிருந்து, சம்மேளன கவுரவத்தலைவர் சி.எச்.பால மோகனனை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தான் தில்லியில் இருப்ப தாகவும் வரும் புதனன்று (பிப். 19) கல்வி அமைச்சர், கல்விச் செயலர், கல்வி இயக்கு னர், துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் சம்மேளன பொறுப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தரம் செய்யும் பிரச்சனைக்கு முடிவு காணு வோம். இப்போது கலைந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். முதல்வ ரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். மேலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம். முதல்வர் செவ்வாய்கிழமை நேரத்தை அறிவித்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்காண வேண்டுகிறோம். எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்துப் பள்ளி நிர்வாகங்க ளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.