tamilnadu

img

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் கொரோனா தொற்றுக்காக ஒத்திவைக்க முடியாது - யுபிஎஸ்சி

கொரோனா தொற்று நெருக்கடி தெடர்பாக அக்டோபர் 4 ஆம் தேதி நடத்தவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என மத்திய பொது சேவை ஆணையம் (யுபிஎஸ்சி) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அரசாங்கத்தின் பல்வேறு சிவில் சேவைகளுக்கான நியமனங்கள் மற்றும் தேர்வுகளுக்கான மத்திய ஆட்சேர்ப்பு மையமான யுபிஎஸ்சியை, அவர்களது வாக்குமூலத்தை நாளைக்குள் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த வலக்கை அக்டோபர் 23 ஆம் தேதி மீண்டும் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, மே 31 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு, கொரோனா தொற்றின் வீரியம் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. தேர்வு குறித்து 20 சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளனர்.