tamilnadu

img

அத்வானி ஆசிர்வாதத்தோடுதான் பாஜக-விலிருந்து விலகினேன்...

புதுதில்லி:

பாஜக-வில் இருந்து விலகியபோது அத்வானி தனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார் என்று, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த, முன்னாள் பாஜக தலை வர் சத்ருகன் சின்கா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சத்ருகன் சின்கா மேலும் கூறியிருப்பதாவது:-


பாஜக-வில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். வாஜ்பாயின் பேச்சைக் கேட்டு மனதைப் பறிகொடுத்து பாஜகவில் சேர்ந்தேன். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது. இப்போது தனிநபர் ஆதிக்கம் வந்துவிட்டது. எனவேதான் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தேன். 


இதையொட்டி அத்வானியைச் சந்தித்து ஆசி பெற்றேன். அப்போது அவர் எனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார். பாஜக-வில் இருந்து விலக வேண்டாம் என்று அவர் என்னை தடுக்கவில்லை. அதற்கு பதில் அவர் எனது அன்பு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்தார். இப்போது நான் சரியான திசைக்கு வந்துள்ளேன். அந்த திசை நல்ல திசையாகவும் உள்ளது.


அத்வானியை பாஜகவினர் மிகவும் அவமரியாதை செய்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்டதால் என்னை பணிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால், நான் பணியவில்லை. எனவே கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதிக்கு பாஜக தலைமை எதுவும் செய்யவில்லை. மோடி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக் கிறார். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று நம்புகிறார். 23-ஆம் தேதி அவருக்கு உண்மை தெரிந்து விடும். இவ்வாறு சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.

;