tamilnadu

img

இந்தியாவில் 88.14 லட்சம் பேருக்கு கொரோனா - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 88.14 லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 41,100 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,14,579 ஆக உயர்ந்துள்ளது. 
நேற்று ஒரே நாளில் 447 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,29,635 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 82.05 லட்சமாக அதிகரித்துள்ளது. 
4.79 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.