tamilnadu

img

புதுச்சேரியில் ரூ.4.09 கோடி பறிமுதல்!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் ரூ.4. 09 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்

புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க  72 பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.

மாநில எல்லைகளிலும், வாகனங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில், இன்று மதியம் 100 அடி சாலை அருகேயுள்ள ஜான்சி நகரில் ஒரு பைனான்சியர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் பறக்கும் படைக்கு கிடைத்தது

இதையடுத்து அங்கு சென்று தேர்தல் பறக்கும் படை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டில் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் என மொத்தமாக ரூ.3.68 கோடி  இருந்தது தெரியவந்தது.

மேலும் இரண்டாவதாக, நெல்லித்தோப்பில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் 45.46 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.09 கோடியை பணத்தை கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் செல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது ஏன் என விசாரணை நடைபெற்று வருகிறது.

 

;