புதுச்சேரி:
கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஒலி எழுப்பி நூதன போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.மத்திய பாஜக அரசு இந்த ஆண்டு மட்டும் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.800 வரை உயர்த்தி உள்ளது. மேலும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியும் கடுமையாக உயர்த்தி உள்ளதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி நகர குழு சார்பில் காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சத்தியா,பிரதேச குழு உறுப்பினர் கலியமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.நகரக் குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, மணவாளன், பொன்னுரங்கம் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் ஒலி எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.