tamilnadu

img

புதுச்சேரி - அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் விடுமுறை

புதுச்சேரியில் அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் அனைத்து தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கும் வருகின்ற 31 ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா விடுமுறை அறிவித்தார். 

;