tamilnadu

img

டெங்கு, சிக்கன்குனியாவை தடுக்கும் வகையில் பெண் கொசுக்கள் உருவாக்கம்!  

டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் புதிய வகை பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளனர்.  

கொரோனா பாதிப்புக்கு முன்னதாக டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் மக்களை வாட்டி வதைத்தது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது.  

இதுகுறித்து பேசிய ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார், டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம். ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். இதற்கு வல்வாசியா என்று பெயரிடப்பட்டுள்ளது.  

கடந்த 4 வருடங்களாகவே, இதற்காக பிரத்தியேகமாக ஆராய்ச்சி செய்து இந்த அரிய வகை கொசுக்களை உற்பத்தி செய்துள்ளனர். இதன் ஆராய்ச்சி முடிவுகளை விரையில் வெளியிட இந்திய ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.