tamilnadu

img

புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநராக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்ம ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநராக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர்கள் நியமிக்கும் வரை சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநர் பொறுப்பை வகிக்கிறார். 
 

;