புதுச்சேரியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள பழைய துறைமுகம் கடலில் இன்று 2 சிறுமிகள் உட்பட 4 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது திடீரென்று வந்த ராட்சத அலையில் சிக்கி அவர்கள் 4 பேரும் கடலுக்குள் மாயமாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடலில் காணாமல் போன 4 பேரையும் தேடி வருகின்றனர். பொலீசார் விசாரணையில், மாயமானவர்கள் புதுச்சேரி நெல்லித்தோப்பை சேர்ந்த மோகனா (16), லேகா (14), நவீன் (12), கிஷோர் (16) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.