tamilnadu

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை

புதுக்கோட்டை, ஜன.21- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(58). இவரது பேத்தி மகாலெட்சுமி (15). மகா லெட்சுமிக்கு தாய், தந்தை இல்லாத தால், தாத்தா முனியாண்டி வளர்த்து வந்தார்.  கடந்த 25.6.2017-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் மதுரைவீரன் (14) என்பவர் மகாலெட்சுமி யை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.  இது குறித்து முனியாண்டி, மதுரைவீரனிடம் கேட்டு உள்ளார். அப்போது மதுரைவீரனின் தாயார் புஷ்பம் (45) மகாலெட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த மகாலெட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரில் ஆலங்குடி காவலர்கள், தற்கொலைக்கு தூண்டியதாக புஷ்பம் மீதும், மகாலெட்சுயை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதுரைவீரன் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபரா தமும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி மதுரைவீரன் சிறார் சிறையில் தண்டனை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.

;