tamilnadu

img

கள்ளச்சாராய எதிர்ப்பு பேரணியில் சென்ற அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த மக்கள்

பொன்னமராவதி, ஜன.29- புதுக்கோட்டை பொன்ன மராவதியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட கலால் உதவி ஆணையர் மனோகரன் தலைமையில் நடை பெற்றது. பொன்னமராவதி துணை வட்டாட்சியர் வெள்ளைச்சாமி, தேர்தல் துணை வட்டாட்சியர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் ஜோதி, விஏஓ ரமேஷ், எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  கள்ளச்சாராயம் அருந்துவதால் கண் பார்வை இழப்பு, உடல் உறுப்பு கள் பாதிப்பு ஏற்படும்  போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள், கள்ளச்சாராயம் மட்டும் அல்ல அரசு மதுபானக் கடையில் விற்கப்படும் சாராயத்தையும் மக்கள் அருந்துவ தால் தீங்கு ஏற்படும் என அரசு விழிப்பு ணர்வு செய்ய வேண்டும் என அதிகா ரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

;