புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இளம்பெண்ணின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மருத்துவமனை முன்பாகஉறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். முறையான விசாரணை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஆலங்குடியை அடுத்த கும்மங்குளம் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் முருகேசன்.இவரது மகள் அபிநயா(15). திருச்சியில் உள்ள தனியார்பள்ளியில் பத்தாம் வகுப்புபடித்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவுவீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடந்துள் ளார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஆலங் குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டுபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இளம்பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை பாலியல் வன்கொலை செய்து இருக்கலாம். எனவே, முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, ஆலங்குடிகாவல் ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் டி.சலோமி, ஒன்றியச் செயலாளர் கே.நாடியம்மை மற்றும் உறவினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறுமியின் சாவில் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் சிறுமியின் உடலைப் பெற்றுவெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் ஒன்றியச் யலாளர்எல்.வடிவேல், சமீபகாலமாக ஆலங்குடி வட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட சம்பவங் கள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கும் மங்குளத்தைச் சேர்ந்த பள்ளிமாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர் கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, முதல் தகவல் அறிக்கையில் தற்கொலை என்பதைத் திருத்தி சந்தேக மரணம் எனப் பதிவு செய்து முறையான விசாரணையை காவல்துறையினர் மேற் கொள்ள வேண்டும். வேறுவகையில் இறந்திருந்தால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.