அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக அறந்தாங்கி நூலகத்தில் இலவசமாக புத்தக அலமாரிகளும், இரும்பு இருக்கைகளும் வழங்கப் பட்டன. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் க.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன், முன்னாள் துணை ஆளுநர் சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சூரிய பிரபு, இன்ட்ராக்ட் சேர்மன் சித்ரா ரமேஷ், வாழ்த்தி பேசினர். ரோட்டரி கிளப் ஆறுமுகம், விஜயா துரைராஜ், வாசகர் வட்ட தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 10 செட் இருக்கைகள், 5 புத்தக அடுக்குகள் நூலகத்திற்கு வழங்கப் பட்டன. ஜெம்ஸ் ஆளுநர் கோபாலகிருஷ்ணன், துணை ஆளுநர் தங்கமணி மற்றும் செலக்சன் பள்ளி மாணவர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர். நூலகர் கார்த்திகேயன் ஏற்புரையாற்றி னார். நிறைவாக வீரையா நன்றி கூறினார்.