பொன்னமராவதி, ஆக.8- பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் சேதுராமன் பெட்ரோல் பங்க் முதல் இந்திராநகர் வரையி லான 1565 மீட்டர் சாலைப் பணிகளை கிடப்பில் போடாமல் உட னடியாக அமைக்க வேண்டும் என சிபிஎம் அண்ணாநகர் கிளை சார்பில் வெள்ளியன்று நூதன போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதுதொடர்பான சமாதானக் கூட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் பொன்னமராவதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் சிபிஎம் உறுப்பி னர்கள், 460 மீட்டர் சிமெண்ட் சாலையை தவிர்த்து (சிமெண்ட் சாலைக்கான கெமிக்கல் பவுடர் வெளிமாநி லத்திலிருந்து வந்தவுடன் பணி துவங்கும் என தெரிவிக்கப்ப ட்டது) மற்ற தார்ச் சாலை பணிகளை ஆக.14-க்குள் துவங்கி ஆக.25-க்குள் முடித்து விடுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதிய ளித்ததை தொடர்ந்து சிபிஎம் சார்பில் நடைபெறவிருந்த நூதன போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.