புதுக்கோட்டை, செப்.2- தீ ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 29-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் தொடங்கி யது. சிங்கிள் டிராப் உள்பட 4 பிரிவுகளில் 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் பிரிவு ஆகிய 3 பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று ராயல் புதுக் கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது. மிக்ஸடு பிரிவில் சென்னை ரைபிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றது. பரிசளிப்பு விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகி யும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவருமான டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செய லாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கினர்.