tamilnadu

கருப்புப் பட்டையுடன் பணியாற்றிய வருவாய்த் துறை ஊழியர்கள்

புதுக்கோட்டை, மார்ச் 12- விதிகளை மீறிப் வழங்கப்பட்ட பதவி  உயர்வுப் பட்டிலை ரத்து செய்ய வலியுறு த்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கி ழமை கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடு பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முது நிலை வருவாய் ஆய்வாளர்களை பதவி உய ர்வு மூலம் தற்காலிக துணை தாசில்தார்களாக மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி கடந்த  நான்கு மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்தார். விதிகளின்படி வழங்கப்பட்ட இந்நியமனத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வரவேற்றது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், வருவாய்த்துறை நிர்வாக ஆணையரின் உத்தரவுப்படி மேற்படி பதவி உயர்வை ரத்து செய்துவிட்டு புதிய பட்டி யலை கடந்த 3 ஆம் தேதி ஆட்சியர் வெளி யிட்டார். விதிகளை மீறிப் போடப்பட்ட துணை  தாசில்தார் ஆணைகளை ரத்து செய்துவிட்டு பழைய பதவி உயர்வுப் பட்டியலை மீண்டும்  வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்கத்தினர் புதுக்கோ ட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமையன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை பணிக்குத் திரும்பிய வரு வாய்த்துறையினர் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்தும் அதே நேரத்தில் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் கருப்பு பட்டை அணிந்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.