tamilnadu

சாலையில் கிடந்த ரூ.29 ஆயிரம்:  உரியவரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அண்ணாசிலை  அருகே உள்ள முனி கோவில் சாலையில் இருசக்கர வாக னத்தில் சென்ற போட்டோகிராபர் ராஜசேகர், சாலையில் ஒரு கவர் கிடந்ததை பார்த்தார். அந்த கவரை எடுத்து  பார்க்கும் போது உள்ளே 500ரூபாய் நோட்டுகள் 29000 ரொக்கம் இருந்ததைக் கண்டார். பின்னர் அந்த பணத்தை காவல் நிலையம் கொண்டு  சென்றார். அங்கு அந்த கவரின் மேல் உரியவரின்  பெயர், செல்போன் எண்எழுதி இருந்தது. உடனடியாக  அந்த நம்பருக்கு போன்செய்து காவல் நிலையத்திற்கு வரவ ழைக்கப்பட்டு உதவி ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் பணத்திற்கு உரியவர் மகேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.