tamilnadu

img

கிராமிய இசைக்  கலைஞர்களுக்கு நிவாரணம்

அறந்தாங்கி, மே 13- 144 தடை உத்தரவு காரணமாக  வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியில் உள்ள 115 க்கும் மேற்பட்ட கிராமிய இசைக் கலைஞர்களுக்கு தலா 5 கிலோ அரிசி பை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர், ராஜா பர்னிச்சர் ராஜா, அறந்தாங்கி முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் லெ.முரளிதரன், ரோட்டரி கிளப் புவனா செந்தில் ஆத்மா மதிவாணன், சுப்பிரமணியன், செந்தில்வேலன் ஆகியோர் தனிநபர் இடைவெளியோடு நிவாரணப் பொருட்களை  வழங்கினர்.