புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளை ஞர் திறன் திருவிழாவை வியாழக் கிழமை நடத்தியது.
இம்முகாமை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி, உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) தில்லைமணி, கல்லூரி முதல்வர் ஜெயபால், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொது விநியோகக் கட்டிடம்
அண்டக்குளத்தில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டி டத்திற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி னார். இந்நிகழ்வில் அண்டக்குளம் கூட்டுறவு சங்க நிர்வாகி தமிழரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குன்றாண் டார்கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன் மற்றும் கிராமப் பொது மக்கள் பங்கேற்றனர்.