வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க டி.என்.ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது.
இந்த நிலையில், 3 பேரின் ரத்த மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது. 8 பேர் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளனர்.