ஓய்வூதியர் சங்கக் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 29- ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் வே.ஜெகன்நாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் பி. ஆழ்வாராப்பன், என்.ராமச்சந்திரன், எம்.முத்தையா, கே.சதா சிவம், பி.பிரபாகரன், இரா.ராஜேந்திரசிங் பங்கேற்றனர். அனைத்து தபால் நிலையங்களிலும் தேவைக்கேற்ப அஞ்சல் அட்டை, இன்லேண்ட் கவர் ஆகியவற்றை இருப்பு வைத்து தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வரும் செப்டம்பர் 11 அன்று சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்ட மாநாட்டை நடத்துவது என பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன
.
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 29-மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை புதுக்கோட்டை ஆட்சி யர் அலுவலகத்தில் காலை 11 முதல் 1 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெறும். மேலும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமை இந்த குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர் ரசீது வழங்கல்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக் குழு உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று பொன்மலை சங்கத்திடலில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு துரைராஜ் தலைமை வகித்தார். பகு திக்குழு செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜ் ஆகியோர் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் கட்சி உறுப்பி னர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.